
எனை உனக்கு பிடிக்குமா என்று
எதார்த்தமாய் நீ கேட்டாய்...
உனை எனக்கு பிடிக்காவிட்டால்
பிடித்திருப்பது எனக்கு பைத்தியம் என்பேன்...
என்னவெல்லாம் பிடிக்கும் என்று
எண்களிட்டு கூற சொன்னாய்...
எதில் தொடங்கி எங்கு முடிக்க
உன்னிடம் எல்லாமே
எனக்குப் பிடிக்கும்....
