பிடித்தமானவளே !!!




எனை உனக்கு பிடிக்குமா என்று

எதார்த்தமாய் நீ கேட்டாய்...

உனை எனக்கு பிடிக்காவிட்டால்
பிடித்திருப்பது எனக்கு பைத்தியம் என்பேன்...

என்னவெல்லாம் பிடிக்கும் என்று
எண்களிட்டு கூற சொன்னாய்...

எதில் தொடங்கி எங்கு முடிக்க
உன்னிடம் எல்லாமே
எனக்குப் பிடிக்கும்....