அதிகாலை நேரம் உறக்கத்தை தனியே உறங்கவைத்துவிட்டு, பத்து நிமிடங்களில் படிப்பதற்கு ஆயத்தமானேன்.. புத்தகத்தைத் திறந்தவுடன் பலர் கூறியது நினைவுக்கு வந்தது…
காலை நேரம் கத்திப் படி சட்டென புத்தி -இல் ஏறும் என்றார் ஒருவர். கத்திப்படித்தால் அவை காற்றோடு போய்விடும் , எனவே முனுமுனுத்து படி மூளைக்குள் புகுந்துவிடும் என்று சொன்னார் ஒருவர் … வந்திருந்த விருந்தாளியோ, வாய் விட்டு படி , உச்சரிப்பு சுத்தமாகும் என்றார் அக்கறையுடன். படித்தவுடன் அவற்றை எழுதி பார்த்தால் மனதில் பதியும் என்றார் மற்றொருவர்., அப்படியே மனப்பாடம் செய்துவிடு அப்போதுதான் மொத்த மதிப்பெண்ணும் என்றார் எவரோ .., படித்து படித்து யாரிடமாவது அதை ஒப்பித்து பழகு என்றார்கள் பல பேர் ....
குழப்பத்தில் புத்தகத்தை புரட்டியபோது , புரிந்து படி, என்ன படிக்கிறோம் என்பதை அறிந்து படி, பிறருக்கு எப்படி இதை விளங்க வைக்கலாம் என்று உணர்ந்து படி, அது உன் ஆயுள் முழுதும் மறக்காது என்றார் என் அப்பா …
அப்படி படித்த போது ஐம்பது சதவிகித நிம்மதியும் அதன் பின் அம்மா தந்த காபியை அருந்தியவுடன் முழுமையான நிம்மதியுடன் மேல் மாடியை விட்டு கீழ் இறங்கினேன் .… பள்ளிக்கு கிளம்ப....